கோதுமை துக்கடா செய்வது எப்படி?

கோதுமை துக்கடா மாலை நேரத்தில் உண்ணப் பொருத்தமான சிற்றுண்டியாகும்.

தற்போது நிலவும் மழைக் காலத்தில் காரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும்.

இனி சுவையான கோதுமைதுக்கடா செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.

 

கோதுமை துக்கடா செய்ய‌  தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 400 கிராம் (¼ படி)

மிளகாய் வற்றல் பொடி – 3 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 5 இதழ்கள் (பெரியது)

க‌ல் உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை

முதலில் வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின் அதனை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவுடன் மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

 

மாவுடன் இதர பொருட்கள்
மாவுடன் இதர பொருட்கள்

 

உப்பு கலந்த தண்ணீர்
உப்பு கலந்த தண்ணீர்

 

சப்பாத்திக்கு திரட்டுவது போல் மாவினை ஒரு சேர உருண்டையாக பிசையவும்.

 

மாவு பிசையும் போது
மாவு பிசையும் போது

 

கட்டியான மாவு
கட்டியான மாவு

 

எண்ணெய் தடவிய மாவு
எண்ணெய் தடவிய மாவு

 

பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும்.

சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது.

 

சப்பாத்தி வடிவில் மாவு
சப்பாத்தி வடிவில் மாவு

 

பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.

 

சதுரத் துண்டுகளாக மாவு
சதுரத் துண்டுகளாக மாவு

 

பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும்.

 

எண்ணெய் காயும்போது
எண்ணெய் காயும்போது

 

மாவினை எண்ணெயில் விடும்போது
மாவினை எண்ணெயில் விடும்போது

 

அவ்வப்போது சதுரத்துண்டுகளைக் கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும்.

சுவையான கோதுமை துக்கடா தயார்.

 

துக்கடா வேகும்போது
துக்கடா வேகும்போது

 

 

நன்கு வெந்த துக்கடா
நன்கு வெந்த துக்கடா

 

இத்துக்கடா ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இதனை சிறியவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

குழந்தைகளுக்கு பள்ளிக்கும் இதனைக் கொடுத்து விடலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சமையல் எண்ணெயைச் சிறிதளவு காய்ச்சி கோதுமை மாவில் ஊற்றி மாவினைத் திரட்டி துக்கடா செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கரம் மசாலாப் பொடி தேவையான அளவு கோதுமை மாவில் சேர்த்து மாவினைத் திரட்டி துக்கடா செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.