அணை உடைந்த கதை – க.வீரமணி

“ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில், யாரோ மாடு மேய்க்கிற பெண் சாமி வந்து ஆடி அருள் வாக்கு சொல்வதை நம்பிக் கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து உறுதியாகக் கட்டியுள்ள அணை உடைந்து விடும்; அதை தடுக்க வேண்டும் என்று ஒரு ஊரே திரண்டு வந்து மனு கொடுக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?” என்று கலெக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

Continue reading “அணை உடைந்த கதை – க.வீரமணி”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 3 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு சுவாமி அலமாரியில் விளக்கேற்றி விட்டு குமுட்டி அடுப்பைப் பற்ற வைத்து காபி டிகாஷனுக்காக பாத்திரத்தில் தண்ணீர் வைத்துவிட்டு மர அலமாரியில் பொருத்தப்பட்டிருந்த காபிகொட்டை அரைக்கும் மெஷினில் வறுத்த காபிக்கொட்டையைத் தேவையான அளவு போட்டு எல்-வடிவ கைப்பிடியைச் சுழற்றினார் நாற்பத்தெட்டு வயது பார்வதி மாமி.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 3 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

அவசரம் – எம்.மனோஜ் குமார்

சுந்தரியை பெண் பார்க்கும் படலம் முடிந்து அவளிடம் தனியாகப் பேச மொட்டை மாடிக்கு போனான் ரகுவரன்.

“என்ன மொபைல் வெச்சிருக்கிற? நான் பார்க்கலாமா?” கேட்டான் ரகுவரன்.

Continue reading “அவசரம் – எம்.மனோஜ் குமார்”

அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ

திருமணம்

அந்த எந்திரப் பறவை தரையிறங்க பத்து நிமிடமே இருந்தது. கிட்டத்தட்ட எல்லா பயணியரும் பரபரப்புடன் இருந்தனர். வசந்த் லேசான புன்முறுவலுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து மணி நேரம் பொறுமையாகப் பிரயாணம் செய்பவர்களால் பத்து நிமிடம் காத்திருக்க முடியவில்லை. அவரவருக்கு என்று பல சொந்த காரணங்கள் இருக்கக் கூடும்.

அறிவிப்பின்படி சீட் பெல்ட் அணிந்து கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். மறுநிமிடம் மூடிய இமைகளுக்குள் லிசியின் முகம் வந்து மறைந்தது. லிசி அவனைக் கட்டிப் பிடித்து வழி அனுப்பியிருந்தாள்.

Continue reading “அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 2 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தின் பகுதி அது.

காவிரியின் கிளை ஆறுகளான திருமலைராயன், குடமுருட்டி மற்றும் முடிகொண்டான் ஆகிய மூன்று ஆறுகள் அழகு நடைபோட்டு செல்லும் பகுதியென்பதால் ஆங்காங்கே வற்றாத குளங்களும் கண்மாய்களுமாய் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தன.

கண்களுக்கு எட்டியவரை பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் ‘பச்சைப் பசே’லென்று காற்றிலாடும் நெற்கதிர்களைக் கொண்ட கழனிகள், வாழைத் தோப்புகள், மாஞ்சோலைகள் மற்றும் கரும்புத் தோட்டங்கள்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 2 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”