கரையாதே காக்கையே – கவிதைகள்

விருந்தாளிகள் வர வேண்டி

கூரை மேல் நின்று கரையாதே

காக்கையே,

இங்கு எனக்கே அடுத்த

இரண்டு வேளை உணவில்லை

Continue reading “கரையாதே காக்கையே – கவிதைகள்”

பூந்தி லட்டு செய்வது எப்படி?

பூந்தி லட்டு

பூந்தி லட்டு தித்திக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்று. முதன் முறையாக சமைப்பவர்களும் கூட எளிதில் செய்யக் கூடிய இனிப்பு வகை இது.

இதனை அசத்தலாகச் செய்வதற்கு ஒருசில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் மட்டும் போதும்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் இதனை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

Continue reading “பூந்தி லட்டு செய்வது எப்படி?”

சாதி – சில சிந்தனைகள்

சாதி - சில சிந்தனைகள்

சாதி என்பது ஓர் இந்தியனின் முக்கியமான அடையாளம். நம்முடைய சிந்தனையில் சாதி என்பது பிரிக்க முடியாதது. நாம் சாதியைக் கடந்து போக நினைத்தாலும், இந்த சமூகம் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு விடாது.

அடையாளம் என்பதைத் தாண்டி ஆதாரம் என்ற நிலையை நோக்கி சாதி நகர்கிறது. சாதியை நமக்கான ஒரு பலம் பொருந்திய பின்ணணியாக நாம் பார்க்கிறோம்; நம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதனை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

சாதியை விட்டு விட்டு நம்மால் யோசிக்க முடியவில்லை.

ஒருபுறம் நல்ல கல்வி பெற்ற, பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் சாதியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலை கொஞ்சம் தோன்றுகிறது.

மறுபுறம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் உருவாக்கும் சாதிப் பற்று, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள அதிகம் படிக்காத, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மிக எளிதாக சாதி வெறியர்களாக மாற்றி விடுகிறது.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ சாதி ஒரு மறுக்க முடியாத சக்தி. சாதி பற்றிய ஒரு தெளிவு இருந்தால்தான் இந்தியாவில் பொதுவாழ்வில் நாம் ஏதேனும் சிறிதளவு நல்ல வழியில் பங்காற்ற முடியும்.

அத்தகைய ஒரு தெளிவைத் தன் இலக்கிய ஆராய்ச்சியின் மூலம் நமக்கு வழங்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “சாதி – சில சிந்தனைகள்”

விடை குறும்படம் விமர்சனம்

விடை - குறும்பட விமர்சனம்

விடை குறும்படம் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடூர முகம் எவ்வாறு தாண்டவம் ஆடும்? என்பதை விளக்குகிறது.

அது கை கால்கள் வெட்டப்பட்டு நிர்க்கதியாய், எதை நோக்கிய பாதையிலோ, நீண்ட வலியுடன் செல்லும் நிலையை உடையது.

வேலை இல்லாது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலுள்ள ஒருவனின் அல்லது ஒருத்தியின் நிலையே குறும்படத்தின் ஆழமான கதை ஆகும்.

Continue reading “விடை குறும்படம் விமர்சனம்”