உன்னை என் நாடு என்கிறேன்
என் எதிர்காலம் இங்கு தானென்கிறேன்.
Continue reading “அகதி – கவிதை”இணைய இதழ்
சினிமா இயக்குநர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவருடைய கதைக்கு நான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி வந்தார்.
அப்போது நான் ரவி என்கிற இயக்குநரின் படத்தில் துணை இயக்குநராக வேலை செய்து வந்தேன். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருந்தது.
Continue reading “மெலியார்மேல் செல்லும் இடத்து - சிறுகதை”ஒரு ரோஜாவை
உனக்கு தருவதற்காக
கையில் பிடித்தபடி
காத்திருக்கிறேன்.
சென்ற வாரம் இதே நேரம் மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் ஹால் முழுவதும் உறவினர்களும் நண்பர்களுமாய் நிறைந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க, இன்றோ ஒவ்வொருவரும் மன அமைதியைத் தொலைத்துவிட்டு, முகத்தில் இறுக்கம் சூழ, தலையில் கைவைத்தபடி ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து மௌனத்தில் மூழ்கியிருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஹால் சுவர்க் கடிகாரம் காலை மணி பத்து என்பதைக் காட்டி தனது கடமையைச் செய்து விட்ட திருப்தியுடன் மணி அடிப்பதை நிறுத்திக் கொண்டது.
கிருஷ்ணகுமார் தான் அந்த மயான அமைதியைக் கலைத்தான்.
Continue reading “கற்பு – சிறுகதை”இயற்கைச் சூழல் முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இக்காலத்தில் இயற்கைச் சூழலின் நிலையை நாம் அறிவோம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து இனி வருங்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்.
காலத்தின் கோலம், போலி நாகரீக மோகம், பண்பாடு மற்றும் கலாசார சீரழிவுகளால் நம் பாரத நாட்டில் இயற்கை சூழல் கெட்டது. நாம் கெடுத்தோம்.
எப்படிப்பட்ட சூழலில் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதை, நம் மொழியால், வளர்ந்த இலக்கியத்தால் அறியலாம்.
Continue reading “இயற்கைச் சூழல் – எப்படி இருக்கிறது? எப்படி இருந்தது?”