கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி?

கருப்பு உளுந்து லட்டு

கருப்பு உளுந்து லட்டு உடலுக்கும் எலும்புக்கும் வலுவினை உண்டாக்கும் சத்தான உணவு ஆகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.

இரும்புச் சத்து, கால்சியம் சத்து, ஜிங்க் சத்து உள்ளிட்ட உடல் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்களை இது உள்ளடக்கியுள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும்.

Continue reading “கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி?”

அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார் சிவவழிபாட்டுக்குரிய பொருட்களை தவறி கீழே விட்டதால், சிவவழிபாடு தடைபட்டதாகக் கருதி அரிவாளால் தன்னுடைய கண்டத்தை அறுத்த வேளாளர்.

அரிவாட்டாய நாயானார் சோழ நாட்டில் இருந்த கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளராக வாழ்ந்தவர். இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத அன்பு கொண்டிருந்தனர்.

Continue reading “அரிவாட்டாய நாயனார்”

நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்

படிக நீர்

மதிய நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ‘மோர் குடித்தால் இதமாக இருக்கும்’ என்று மனதில் தோன்றியது.

சமையலறைக்குச் சென்றேன்.

சமையலறை மேடையிலிருந்த ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. ‘மோர் குடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இன்னும் மேலெழுந்தது.

உடனே, கலவைக்கருவி (மிக்சி) ஜாடியை எடுத்து அதில் தயிரை இட்டு, அத்தோடு சிறிதளவு நீரை சேர்த்து கலவைக்கருவியில் வைத்து இயக்கினேன். சில நொடிகளில் மோர் தயார் ஆனது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்”