“ஐயா, எங்காத்துகாரருக்கு நாகமல முருகன் கோவில் பூசை முறைய, ரகு பட்டர்ட்ட இருந்து வாங்கிக் கொடுங்க” என்றபடி தர்மகர்த்தா முன்பு மங்களம் பவ்யமாக நின்றாள்.
“ஏம்மா, என்னாச்சு?” என்று தர்மகர்த்தா மிடுக்காக் கேட்டார்.
“பெத்தா கோவில் மடப்பள்ளியில பார்க்கற வேலைக்கு தர்ற வருமானம் குடும்பத்துக்குப் பத்தல. அதனால நாகமல முருகன் கோவில் கார்த்திகைப் பூசை முறைய மட்டும் எங்காத்துகாரருக்கு கொடுத்தா, எங்களுக்கும் கொஞ்சம் வருமானம் வரும்.” என்றாள் தர்மகர்த்தாவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்நோக்கி.