சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு

இருன்டினிடே எடுத்த முடிவு

இங்கு

சொர்க்க வனத்தின் தெற்குப் பகுதியில் ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கியிருக்கிறது.

வாக்டெய்லை தொலைத்துவிட்ட துயரத்தில் இருந்து அவை மெல்ல மீண்டு வருகின்றன. ஆம், அவை தங்களை தாங்களே தேற்றிக் கொண்டிருக்கின்றன. அதனால் குருவிகள் ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பியிருகின்றன என்றே சொல்லலாம்.

Continue reading “சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு”

தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி

தமிழ்ச்சரம்

பல வண்ண மலர்களைத் தொடுத்துக் கட்டும் மாலையைச் சரம் என்று கூறுவர். கண்களுக்கு விருந்தையும், நுகர்வதற்குப் பலவித மனத்தையும் தருவது ’சரம்’ ஆகும்.

மலரைச் சுற்றும் வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிடும். அது காதுகளுக்கு ஓசையோடு இனிமை தரும். மலர் ஸ்பரிசத்தில் சுகமானது. ஆக, நம் புலன்களில் நான்கினுக்கும் சரம் தீனி போடுகிறது.

தமிழ்மொழி இணையதளங்கள், இன்று தமிழ்மொழியை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாகும். அவை காலத்தின் அதீத வளர்ச்சியால் விளைந்தவை.

Continue reading “தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி”

நிதர்சனமாகா ஆசைகள்

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

புவியைத் தாண்டி புலம்பெயர்ந்து புதுயுகம் படைக்க ஆசை

புவியிடைக் கோட்டில் நின்று பூரிப்பாய் பூ பந்தாட ஆசை

கைரேகையை வைத்து ஆயுளைக் கணக்கிடும் கணியனைப்போல்

Continue reading “நிதர்சனமாகா ஆசைகள்”

அப்பத்தா – சிறுகதை

அப்பத்தா

“அப்பத்தா, பரண்ல இருக்கிற உழக்க காணல” என்று கத்தினாள் மஞ்சு.

“நல்லா பாருத்தா, அங்கதான வைச்சேன். ஒருவேள உங்க ஐயன் காச எடுத்திட்டு உழக்க எங்கேயும் போட்டுட்டானோ? சரி, மரப்பீரோலு மேத்தட்டுல சேலைக்கு அடியில சின்ன பையில காசு வைச்சிருக்கேன். அத எடுத்து கொய்யாப் பழம் வாங்கு” என்றாள் செல்லம்மா.

“சரி, அப்பத்தா”

“இப்படிதான் என்னப் பாடாப் படுத்துறான். நாத்து நட்டு, கள பிடுங்கின்னு குறுக்கு ஒடிய காட்டு வேலைக்கு போயி, மாட்டுல பால் கறந்து வித்துன்னு, நாலு காசு பார்க்குறதுக்கு என்ன கஷ்டப்படுறேன். இந்த மனுசன் அதப் புரிஞ்சுக்காம, உழக்குல இருந்த காச எடுத்திட்டு, உழக்கையுமுல்ல காணாமப் போட்டுட்டான் பாரு தங்கம்” என்று மஞ்சுவின் அம்மாவிடம் புலம்பினாள் செல்லம்மா.

Continue reading “அப்பத்தா – சிறுகதை”