இயற்கை விளையாட்டு பானம் இளநீர்

இளநீர்

சுள்ளென்று வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு இயற்கையின் இதமான பானம் இளநீர் என்றால் யாராவது மறுத்துக் கூறமுடியுமா?. இல்லை என்பதே பதிலாகும்.

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்காக கோடைக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் இளநீரினை குடிக்கலாம். Continue reading “இயற்கை விளையாட்டு பானம் இளநீர்”

பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் என்றதுமே கொடுமையான வெயில், பரந்த மணல்பரப்பு, ஆங்காங்கே உள்ள கள்ளிச்செடிகள் மட்டுமே நம் நினைவிற்கு வரும். ஆனால் இயற்கையானது பாலைவனத்தையும் அற்புதமான வாழிடமாக வடிவமைத்துள்ளது என்பதே உண்மை.

பாலைவனமானது வாழிடமாக மட்டுமில்லாமல் ஏராளமான கனிம மற்றும் கரிமத் தன்மை கொண்ட மனித வளர்ச்சிக்கான வளங்களையும் கொண்டுள்ளது. பாலைவனமானது நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்”

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் சிவகணங்களுள் ஒருவரான குண்டோதரன் என்னும் பூதத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது மீனாட்சியம்மமை உணவளித்ததைப் பற்றி கூறுகிறது.

தன்னுடைய செல்வ செருக்கினால் மீனாட்சிக்கு உண்டான கர்வத்தினை அடக்க சுந்தரேஸ்வரர் இத்திருவிளையாடலை நிகழ்த்தியதாகவும் கருதப்படுகிறது. Continue reading “குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்”

இரும்பு உடலைத் தரும் கரும்பு

கரும்பு

கரும்பு என்றாலே இனிக்கும். கரும்பினை நினைத்தவுடன் அதனுடைய இனிப்பு சுவை, வாயில் நீர் ஊற வைக்கும்.

வெயில் காலத்தில் நம்நாட்டில் கரும்புச்சாறு அருந்தாதவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

கரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். Continue reading “இரும்பு உடலைத் தரும் கரும்பு”

ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்

இராசபாளையம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் அருகே உள்ள‌ கொல்லூரணி குளத்தின் அழகிய புகைப்படங்கள். எடுத்தவர் ‍ திரு. வ.முனீஸ்வரன் அவர்கள். Continue reading “ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்”