விவசாயம் – கவிதை

விவசாயம்

கையிலே தூக்குவாளி

தலையிலே சோத்துக்கூடை

நைந்து கிழிந்த சேலை

நாணலாக ஆடி வரும் தண்டட்டி

பல்லாங்குழி பொக்கவாய் பாட்டி

பரிவுடனே வந்திடுவாள்! Continue reading “விவசாயம் – கவிதை”

சத்தை ஏர் மூக்கையா – கதை

சத்தை ஏர் முத்தையா

சத்தை ஏர் மூக்கையா ஓர் ஏழை விவசாயக் கூலியின் கதை.

நமது கிராமங்களில் பச்சைப் பசேலென பச்சைப் பாயை விரித்தாற்போல் எங்கும் பசுமையாக இருந்த பலவிளைநிலங்கள், இன்றைக்கு தரிசுக் காடாகவும், வீட்டு மனைகளாகவும் காட்சி தருகின்றன.

அப்படியாகத்தான் தஞ்சைத் தரணியின் சூரப்பள்ளம் எனும் அழகிய கிராமமும் காலத்தின் போக்கினால், மாறுபட்டு முற்றிலுமாக கலையிழந்து நிற்கிறது.

காலத்தின் மாற்றம், விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமை பீத்திக் கொள்ளும் சனங்களுக்கு மத்தியில் அகப்பட்டும், உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ஏழை விவசாயி சத்தை ஏர் மூக்கையா என்ற‌ ஒருவரோடு சேர்ந்துதான் நாம் சிறிது நேரம் பயணிக்கப் போகிறோம்.

“ஏங்க; உங்களே! உங்களே!

கெவர்மண்டு ஆபிசர் வந்திருக்காவோ

போயிட்டு என்னானு பாருங்க”

என்று பொன்னம்மாள் மாட்டுக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த கணவரான சத்தை ஏர் மூக்கையாவை உசுப்பினாள்.

“வாங்க சாமி, கும்பிடுரோனுங்க”

Continue reading “சத்தை ஏர் மூக்கையா – கதை”

ஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.

ஆட்டுக் கிடை

ஆட்டுக் கிடை போடுதல் என்பது பழங்காலத்தில் மக்கள் கடைப்பிடித்த‌ இயற்கை விவசாய முறைகளில் ஒன்றாகும்.

மனிதன் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் உருவான காலத்தில் இருந்து ஆடு வளர்த்தல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

ஆட்டின் கழிவுகளான சாணம், சிறுநீர் ஆகியவை இயற்கை உரங்களாக பயன்பட்டு வருகின்றன. Continue reading “ஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.”