விளக்கேற்றிய பெருமாட்டி!

சாராள் தக்கார்

மருத்துவரான தன் சகோதரனின் கடிதம் வாயிலாக
தமிழகப் பெண்களின் நிலை அறிந்து
(அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு)
தன் சொந்த நகையினை அனுப்பி

Continue reading “விளக்கேற்றிய பெருமாட்டி!”

தமிழ்ப் புத்தாண்டே வருக!

பூவெனப் பூத்தது புதுவருடம்…
புன்னகை காட்டுது
தமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடு
பிறந்தது பிறந்தது புதுவருடம்…
வளமும் நலமும் தினம் தினமே
இனி வந்தே சேரும் இதுநிஜமே

வசந்தம் எனும் பெருமகிழ்வை
நம் இல்லம்தோறும் தந்திடுமே
வறுமையில்லா வாழ்வுதனை
ஈந்தே மகிழ்வை அளித்திடுமே

Continue reading “தமிழ்ப் புத்தாண்டே வருக!”

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

ஒரு வழிப் பாதை

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

பன்னிரெண்டாம் பொதுத்தேர்வை முடித்து தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மே முதல் வாரத்தில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது வாழ்க்கை முறையின் அமைப்பு கல்வியை வைத்து தீர்மானிக்கப்படுவதால், உங்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற முடிவு, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாக அமையும். அதன் அடிப்படையில் உங்கள் வாழ்வும் தீர்மானிக்கப்படும்.

Continue reading “உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!”

உமா x உமா

உமாX உமா

“கடற்கரையோரம் நடக்கின்ற காதல் கல்யாணத்தில் முடிவது எதிர் நீச்சல்” என்ற பாடலை நிராகரிக்கும் வண்ணம் உமா மகேஸ்வரனும் உமா மகேஸ்வரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, கல்யாண பத்திரிக்கையில் அவர்கள் பெயர் பொருத்தம் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கைப் பொருத்தம் ஏழாம் பொருத்தம்!

Continue reading “உமா x உமா”

மரம்

எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது.

முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார்.

Continue reading “மரம்”

அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?

அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?

அதிகப்படியான நேரம் உட்கார்ந்தே இருப்பது நாள்பட்ட நோய்களின் அபாயத்தை வெகுவாக அதிகரிக்கிறது.

நமது உடல் இயற்கையில் இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் இயக்கமின்றி (செயலற்ற) இருப்பது உடலியல் செயல்முறைகளை சீர்குலைக்கிறது.

Continue reading “அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?”

1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்

1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்

“குட் மார்னிங் மிஸ்டர் மூர்த்தி சார்! என்ன ஒரு வாரமா வாக்கிங் வரல. மகள பாக்க பெங்களூர் போனீங்களா?”

“வெரி குட் மார்னிங் செந்தில் சார்! வீட்டுக்கார அம்மாக்கு லோ பிபி ஆயிடுச்சு. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி நேத்து தான் வீட்டுக்கு வந்தோம்”

“அடடா! இப்ப எப்படி இருக்காங்க மூர்த்தி சார்?”

Continue reading “1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்”