அகதி – கவிதை

உன்னை என் நாடு என்கிறேன்

என் எதிர்காலம் இங்கு தானென்கிறேன்.

என் பழங்காலத்தை விசாரித்து

பகைவனாக்கப் பார்க்கையில்

பாதிக்கப்பட்ட நான்

வில‌கும்போது

அகண்ட பாரதமே

உன் எல்லைகள்தான்

குறுகிப் போகின்றதென்பது

உனக்குத் தெரியவில்லையா?

பத்மினி

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.