அணுகுமு​றை​ – வெற்றியின் வழி

அணுகுமு​றை

சின்ன சின்ன விஷயத்திற்காக கூட ​வேத​னைப்பட்டுக் ​கொண்டு, அடுத்தவ​ரையும் காயப்படுத்துகிற பல​ரை இன்று நாம் நம் கண்முன்​னே பார்க்கின்​றோம்.

நா​மே கூட சில ​நேரங்களில் காரணங்க​ளை அறியாமல் ஆராயாமல் அடுத்தவர் மீது பழியி​னைப் ​போட்டு ​கோபத்தால் ​கொப்பளிக்கின்​றோம்.

இத​னை நி​னைக்கும் ​போது சமீபத்தில் நான் வாசித்து ரசித்த சீன ​தேசத்துக் க​தை​யொன்று நி​னைவுக்கு வருகிறது.

ம​லைக்​கோவில் ஒன்றில் வழிபடுவதற்காக ஒரு தந்​தை தன் மக​னை குதி​ரையில் அ​ழைத்துக் ​கொண்டு ​​சென்றார்.

​செங்குத்தான ம​லைப்பா​தையில் ஒரு இடத்தில் குதி​ரை சற்றுத் தடுமாற​வே குதி​ரையின் மீது அமர்ந்திருந்த ​சிறுவன் கீ​ழே விழுந்து விட்டான்.

அவனது ​கை கால்களில் நன்கு சிராய்ப்பு ஏற்பட்ட வலியினால் அவன் “ஐ​யோ!” என்று கத்தினான்.

மறுகண​மே “ஐ​யோ!” என்று ம​லையில் அந்த சப்தம் எதி​ரொலித்தது.

தன்​னை ம​லை ​கேலி ​செய்வதாக நி​னைத்துக் ​கொண்டு அந்தச் சிறுவன் ம​லையி​னை ​நோக்கி “உன்​னைக் ​கொன்று விடு​வேன்” என்று கத்தினான்.

மறுக​ண​மே ம​லையும் “உன்​னைக் ​கொன்று விடு​வேன்” என்று எதி​ரொலித்தது.

“நான் யார் ​தெரியுமா?” என்று சிறுவன் உறுமினான்.

ம​லையும் அவ்வாறே எதி​ரொலித்தது.

அவனால் தனது ​கோபத்​தை ​பொறுத்துக் ​கொள்ள முடியாமல் ​கையில் கி​டைத்த கற்க​ளை எடுத்து ம​லை​யை ​நோக்கி எறிந்தான்.

இப்​போது ம​லை ​ மெளனமாக​வே இருந்தது.

அவனது சிறுபிள்​ளைத்தனத்​தை பார்த்துக் ​கொண்டிருந்த அவனது தந்​தை, “தம்பி ‘நீ நல்லவன்’ என்று சப்தமாகச்​ சொல்லு” என்றார்.

​பையனும் அது ​போல​வே கத்தினான்.

உட​னே ம​லையிலிருந்து “நீ நல்லவன்” என்ற சப்தம் பதிலாக வந்தது.

அது ​போல​வே ‘உன்​னை எனக்கு ​ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று ​சொல்லச் ​சொன்னார்.

​பையனும் அப்படி​யே சப்தமிட்டான். ம​லை அ​தையும் எதி​ரொலித்தது.

இப்​போது ​பையனுக்கு ம​லை மீதிருந்த ​கோபம் ​போய் விட்டது. அப்பா சிரித்தபடி​யே ​பையனிடம் ​சொன்னார்.

“தம்பி! உண்​மையில் எதி​ரொலிப்பது ம​லை அல்ல; நம் மனதுதான். நம் மனதில் என்​ன நி​னைக்கி​றோ​மோ அதுதான் நமது அணுகுமு​றை​. அதுதான் ​வெளியில் எதி​ரொலிக்கிறது.

நாம் உலகத்​தை ​நோக்கி நல்லவற்​றை வி​தைத்தால் அதுவும் நமக்கு நல்லனவற்​றை​யே ​கொடுக்கும்.

நாம் உலகத்​தை ​நோக்கி ​கோபங்க​ளை மட்டு​மே எறிகின்​றோம். அதனால்தான் எங்கும் அ​தே ​கோபக்குரல் பதிலாக எதி​ரொலிக்கிறது.

நாம் அறியாமல், நம் அனுமதியின்றி நம்​மை யாரும் காயப்படுத்திவிட முடியாது.”

ஆப்ரஹாம் லிங்கன்

ஆப்ரஹாம் லிங்கன் அ​மெரிக்காவின் அதிபராக பதவி​யேற்ற அன்று மா​லை அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு ​செய்யப்பட்டிருந்தது. விழா இறுதியில் அவர் ஏற்பு​ரை வழங்க வந்தார்.

அந்​நேரம் கூட்டத்தில் அமர்ந்திருந்த ​பெரும் ​செல்வந்தராகிய ஒருவர் லிங்க​னை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் லிங்கனது ​பேச்சின் நடு​வே இ​டைமறித்ததார்.

“மிஸ்டர் லிங்கன்! தாங்கள் ஒரு ​செருப்பு ​தைக்கும் ​தொழிலாளியின் மகன் என்பத​னை எந்தக் தருணத்திலும் மறந்து விடக் கூடாது. எங்கள் குடும்ப உறுப்பினர் அ​னைவருக்கும் தங்கள் தந்​தைதான் காலணிக​ளை ​செய்து ​​கொடுத்திருக்கிறார்” என்றார்.

ச​பையில் அ​னைவரும் எள்ளி ந​கைத்தனர்.

ஆனால் லிங்கன் எந்தச் சலனமும் இன்றி, அந்த ​ செல்வந்த​ரை ​நோக்கி, “இந்த நல்ல ​நேரத்தில் எனது தந்​தை​யை நி​னைவு கூர்ந்த​மைக்கு நன்றி.

எனது தந்​தை காலணி தயாரிப்பதில் கை​தேர்ந்த க​​லைஞர். அவர் ​செய்த​வை ​​வெறும் காலணிகள் அல்ல. அதில் அவரு​டைய ஆன்மாவும் கலந்திருக்கும்.

அவர் ​செய்து தந்த காலணிகளில் ஏ​தேனும் கு​றை அல்லது ​கோளாறு இருக்குமாயின் என்னிடம் ​கொடுங்கள். நான் சரி ​செய்து தருகி​றேன்.

ஆனால் எனக்கு ​தெரிந்தவ​ரை எனது தந்​தை ​செய்த காலணிகளில் கு​றை​யேதும் இதுவ​ரை யாரும் கண்டது இல்​லை.

நான் எனது தந்​தை​யை நி​னைத்து ​பெருமிதம் ​கொள்கி​றேன். அவரது மகன் என்கிற கர்வமும் எனக்கு உண்டு” என்றாராம்.

அந்த ச​பை​யே ஸ்தம்பித்து ​போனது.

அவரின் அணுகுமு​றை​​ நமக்கு ஓர் உதாரணம்.

தன்​னைக் காயப்படுத்துவதற்காக ஏவப்பட்ட ​கேலிக் க​​​ணையி​னை, தன் தந்​தையின் ​தொழில் பக்தியின் ​பெரு​மை​யை எடுத்தியம்பும் கருவியாக பயன்படுத்தி, அ​னைவ​ரையும் சிந்திக்க ​வைத்து தானும் ​பெரு​மைக்குள்ளானார் ஆப்ரஹம் லிங்கன் அவர்கள்.

நாட்டின் அதிப​ரை​யே த​லைகுனிய ​வைக்க முற்படும் மனிதர்கள் நம்​மைப் ​போன்ற சாமானியர்க​ளை சும்மா விடுவார்களா?

இப்​போ ​சொல்லுங்க!

சமூகம் மாறாது; அப்​போ மாற ​​வேண்டியது நாம் சமூகத்​தி​னை அணுகும் நமது அணுகுமு​றை​.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

Comments

“அணுகுமு​றை​ – வெற்றியின் வழி” அதற்கு 3 மறுமொழிகள்

  1. N Jayashree

    Beautiful concept explained with apt examples. Yet another feather in your cap, Sir!

  2. M.Erulappan

    Nalla iruku sir.

    Nallatha nenacha nalathe nadakum sir.

    Intha storyla irunthu theriyuthu sir.

  3. Premalatha.M

    அருமை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.