நல்ல மழை நாளில்
ஒரே நேரத்தில்
பொல பொல வென
பிறந்து
பறந்து…
சிறகுகள் உதிர
தரையில் புரண்டு…
அடுத்த சில
மணித்துளிகளில்
பிற உயிர்களுக்கு உணவாகவும்
மறைந்தே போயினும் “ஈசல் “
உற்சாகமாக உலகை வலம் வரும்
இறுதி வரை
மகிழ்வாய் பறக்கும் …
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்… என
குறைவில்லா மகிழ்விற்கு
தடையில்லா
மனம் வேண்டும்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!