குடிசை வீடு
வயிறு நிரம்ப கேப்பைக்கூழு
விடிகாலை வெயிலு
தினமும் அமரும் நடுவீட்டில்
கடிகாரம் அதுதானே
காலம் சொல்லத் தயங்காதே…
அடிமலையில் தவழ்ந்து வரும்
காற்று நடனம் கற்றுத்தர…
செடி கொடி மரங்களெல்லாம்
தானாக ஆட்டம் போட …
பாட்டன் பாரதியின்
காணி நிலம் வேண்டும் என்ற
ஆசை வருதல் இயல்புதான்
ஆனால் அது எப்போதும் கனவுதான்…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942