உலகிலுள்ள ஒட்டுமொத்த
எறும்புக் கூட்டமும்
உன் நினைவுகள் உறையும்
ஆதார நரம்பினைத்
தேடிப் பிடித்து
உருகுலைக்கும் முயற்சியில்
திட்டமிட்டப் படியே
என்மீதுப் படையெடுத்து
எனைச் சுமந்து
நாடு கடத்திச் செல்கின்றன!
அவைகளிடம் எப்படிச் சொல்வேன்?
அடப்பைத்தியக்கார எறும்புகளே!
அவள் நினைவுகளை மட்டுமே
உண்ட நான் இப்பொழுது
ஒரு குடுவைத்தாவர மென!
கவிஞர் விசித்திரக்கவி
கைபேசி: 9080231403
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!