எனக்கான வெற்றிடங்கள்
நிரப்ப யாதும் வரலாம்
இது தானென்றில்லை
வலித்திடும் வெற்றிடங்களில் நியாயங்கள்
தேடித்தேடி அலைகின்றன
ஒன்றும் ஏற்படுத்தாத வெற்றிடங்கள்
என்று ஒன்றுமிலை
மண் பாறையாகிறது
பாறை மண்ணாகிறது
திடமானது
நீராகிறது
நீர் திடமாகிறது
இல்லாமை இருப்பைச்
சொல்லித் தருகிறது
விளங்காத புரிதல்கள் விளக்கமானாலும்
விளங்காது அறிதல்கள்
சிறுதுளி வெளிப்பாடு
பேரண்ட உண்மையை
ஜீரணிக்கச் செய்யும்
யாருமற்ற பிரதேசம் என்றிலை
ஏதோவொன்று
வாழ்கிறது யாதுமாக…
வெற்றிடங்கள் என்றிலை
ஏதோவொன்று
வாழ்கிறது யாதுமாக…
(ஜி.குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் ஹாருகி முரகாமியின் ”பூனைகளின் நகரம்” சிறுகதையிலிருந்த இலக்கிய வளமிக்க வாக்கியங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்)

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!