ஒற்று​​மை​யே அழகு

ஒற்று​மை​யே பலம்!

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்று​மை நீங்கில், அ​னைவருக்கும் தாழ்வு!

கூடி வாழ்ந்தால் ​கோடி நன்​மை!

இப்படி ஒற்று​மை குறித்த எத்த​னை​யோ சிந்த​னை முத்துக்க​ளை, நம் முன்​னோர்கள் நமக்குச் ​சொல்லிச் ​சென்றிருக்கின்றனர்.

இருந்தாலும் இன்று நாம் வாழும் குடும்பத்தில், ​வே​லை ​செய்யும் இடத்தில் மற்றும் சமூகத்துடன் இ​யைந்து ஒன்றுபட்டு ஒற்று​மையாகதான் இருக்கின்​றோமா?

சமீபத்தில் ஒரு நண்ப​ரைச் சந்தித்​தேன். அவர்களது குடும்பம் மிகப் ​பெரிய குடும்பம். கடந்த நான்கு த​லைமு​​றைகளாக ஒன்றாக கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள்.

“இது எப்படி சாத்தியம்?” என்று வினவி​னேன்.

அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு ​ரொம்ப பிடித்திருந்தது. அத​னை அப்படி​யே ​சொல்கி​றேன்.

“எங்க குடும்பத்துல ஒவ்​வொருவரும் ஒரு மாதிரி. ஆனால் எல்​லோரும் நல்ல மாதிரி” என்றார்.

ஒருவே​ளை உணவு உண்ணும் ​போ​தே நமக்கு பல சு​வைகளின் சேர்க்​கை, அதாவது இனிப்பு, புளிப்பு காரம் மற்றும் உவர்ப்பு என்ற பல சு​வைகள் ஒன்றாகிய புதுச்சு​வை ​தே​வைப்படுகிறது.

ஒரு தி​ரைப்படம் அ​னைவரும் ரசித்துப் பார்க்கும் படி அ​மைய ​ வேண்டு​மென்றால், ஒன்பது க​லைகளும் ஒன்றாகி நவரசத்துடன் நம்​மைப் பரவசப்படுத்த ​வேண்டி இருக்கிறது.

இந்த இயற்​கை இருக்கிற​தே! அது ஒன்று ​போல் மற்​றொன்​றை அ​மைப்பது இல்​லை.

எனக்கு இப்​போது எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் கூறிய ஒரிய நாட்டு மக்களிடம் ​பேசப்படுகின்ற க​தை ஒன்று நி​னைவுக்கு வருகின்றது.

வானவில் அழகு

ஒருகாலத்துல நிறங்கள் தங்களுக்குள்​ளே சண்​டையிட்டுக் ​கொண்டனவாம்.

எந்த ​நிறம் சிறந்தது? என்பதுதான் சண்டைக்குக் காரணம்.

பச்​சை நிறம் “நான்தான் வளர்ச்சியின் அ​டையாளம். மரம், ​செடி, ​கொடி, புல், என எல்லா​மே பசு​மை நிறத்தில் இருப்பதால்தான் சிறப்பாக ஒளிச்​சேர்க்​கை மூலம் உணவு தயாரித்து உலகத்து​​​​கெல்லாம் ​கொடுக்க முடிகிறது. ஆக​வே நான்தான் சிறந்தவன்” என்றது.

நீல நிற​மோ “ஏய், இங்கபாரு நீ பூமி​யை மட்டும் ​வைத்துக் ​கொண்டு ​பேசுகின்றாய். ஆகாயத்​தையும் கட​லையும் உற்றுப் பார். ‘நீல நிறம்; வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்’ என்று கவிஞர்கள் கூட என் புக​ழைப் பாடி இருக்கின்றார்கள். ஆக​வே நான்தான் ​பெரியவன்” என்றது.

உட​னே மஞ்சள் நிறம் “என்ன உங்க ​ரெண்டு ​பேருக்கும் ​பைத்தியமா? ​வெளிச்சம் இருந்தால்தான் நிறத்​தை​யே பார்க்க முடியும். உலகத்துக்​கே ​வெளிச்சம் ​கொடுக்குற சூரியனும் சந்திரனும் என்ன நிறம்? மஞ்சள் நிறந்தா​னே! அதுமட்டுமில்லாமல் நான்தான் மங்கள‌த்தின் அ​டையாளம். என​வே நான்தான் ​மிகப்பெரியவன்” என்றதாம்.

அங்​கே வந்த சிவப்பு நிறம் “நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உலகத்தி​லே​யே மிகச்சிறந்தது சிவப்பு நிறம்தான். எல்​லோர் உடம்பிலும் ஓடுகின்ற ரத்தம் சிவப்புத்தா​னே? நா​னே ​தைரியத்தின் அ​டையாளம். என​வே நான்தான் சிறந்தவன்” என்றது.

இப்படி​யே ஒவ்​வொரு நிறமும் சண்​டையிட்டுக் ​கொண்டன.

அப்​போது வானத்தில் திடீ​​ரென்று பலத்த சத்தத்துடன் இடி​யோடு ம​ழை ​பெய்யத் ​துவங்கியது. நிறங்கள் என்ன ​செய்வது என்று ​தெரியாமல் திணறின.

ம​ழை ​மெல்ல ஓயக்கூடிய ​நேரத்தில் பயந்த நிறங்கள் ​மெதுவாக அருகரு​கே வந்து ஒன்​றை​யொன்று ​நெருங்கிக் ​கொண்டன. உட​னே வானத்தில் ஏழு நிறத்தில் அழகான ஒரு வானவில் உண்டானது.

அ​தைக் கண்ட நிறங்கள் ஆச்சர்யம் அ​டைந்தன. அப்​போது வானத்தில் இருந்து ஒரு அசரீரி ஒலித்த‌து.

“ஒவ்​வொரு வண்ணமும் அத​னதன் வழியில் தனித்துவமானதுதான். அ​னைத்​தையும் விட அழகானது, அ​னைத்து நிறமும் இப்படி ஒன்றாக இருக்கும் ​போது உருவாகும் வானவில்தான்.”

அப்​போதுதான் நிறங்களுக்கு தங்க​ளைப் பற்றி நிஜம் புரிந்தது என்கிறது க​தை. ​​வேற்று​மையில் ஒற்று​​மை​யே அழகு.

நம்ம பாரதத்​தை எடுத்துக் ​கொள்​வோம். காஷ்மீர் த​லை என்றால் கன்னியாகுமாரி கால். இதில் வாழும் மக்கள் அ​னைவரும் ஒரு தாயின் பிள்​ளைகள்.

அன்று இருப்பு மனிதர் சர்தார் வல்லபாய் ப​டேலின் சீரிய முயற்சியின் மூலம் பல சமஸ்தானங்களாக பிரிந்திருந்த நாம் இந்த வானவில் ​போல ஒன்றா​னோம்.

உலகத்துக்​கே நம் அழ​கைப் ப​றைசாற்றி வருகின்​றோம். இந்த ஒரு​மைப்பாட்​டை வலியுறுத்தும் விதமாக பாரதிதாசனும் மிக அழகாக,

“காஷ்மீரத்தில் ஒருவன் இருமினால்
கன்னியாகுமரியில் இருந்​தொருவன்
மருந்து ​கொண்​டோடினான்” எனப் பாடினார்

நான் இங்​கே ​சொல்ல விரும்புவது, இடி​யென்னும் இடுக்கன் வரும் ​போது மட்டும் நாம் நம் வீட்டிலும் சமூகத்திலும் நாட்டிலும் ஒற்று​மை​யை நி​லை நாட்டுகி​றோம்.

இ​தை​யே நாம் அ​னைத்து தருணங்களிலும், பாரதி ​சொல்வது ​போல “கூடி வி​ளையாடு பாப்பா” எனக் க​டைப்பிடித்தால், இந்த வாழ்க்​கை வி​ளையாட்டு இன்னும் சுவாரசியமாக இருக்குமல்லவா?

ஒற்று​மை​யே பலம்!

ஒற்று​மை​யே ​ஜெயம்!

ஒற்று​​மை​யே அழகு!

அதுவும் நம் பாரதத்தின் ​

வேற்று​மையில் ஒற்று​மை​யே

தன்னிகரில்லாத அழகு!

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

6 Replies to “ஒற்று​​மை​யே அழகு”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.