கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந் திடநீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தரநீ கடவாய்…
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!