கவிதையும்
ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்
ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்
பொறக்கிக் கலக்க.
நுரைத்த கடல்
கக்கித் துப்பிய வார்த்தை.
கூழாங்கற்களாக்கி
மறை(பார்)க்கின்ற எழுத்தாக்கிகள்.
சன்னலோரக் கண்,
புவி ஆடிய ஆட்டம்.
மனம் பிறாண்டும் நனவோடை நிகழ்வு.
தராசுத் தட்டு இறங்கி ஏறி இறங்கி.
கவிதைத் தூம்பு பீறிட
அடைத்த அடைப்பு எடுப்பார் எவரோ?
முப்பாட்டன் சொத்து.
நான் கட்டிய வீடாகிற பொழுது,
ஆதிமூலமே கா
விதை மரமாகும்
மரமெல்லாம் விதையாகும்.
வெப்பப் பிரளயமோ?, தண்ணீர் ஊற்றோ?
அது – கலவையின் விஸ்வரூபம்.
எனவே, கவிதையும்
ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்
ஒன்றல்ல இங்கொன்றும் அங்கொன்றும்
பொறக்கிக் கலக்க.
– பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
திருநின்றவூர்
9283275782
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!