காணி நிலம் வேண்டும்

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் நெல்லூர் நகரின் புறநகர்ப் பகுதியில் மைய சாலையில் அமைந்திருந்த ‘அன்னபூர்ணா’ ஆசிரமத்தில் அன்று காலை கதிரவன் வானில் உதித்ததிலிருந்து அனைவரும் பரபரப்புடன் காணப்பட்டனர். நுழைவாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆசிரமத்தில் இருக்கும் பெண்மணிகளும் பணிபுரியும் பெண்மணிகளும் வாசலிலும் கேட்டிற்கு வெளியேயும் பெரிய பெரிய கோலங்களைப் போட்டு அவற்றின் மீது வண்ணப் பூக்களைப் பரப்பி வைத்தனர். அந்த ஆசிரமத்தின் பொறுப்பாளர் ஒற்றை நாடி உருவம் கொண்ட பெரியவர் கோவிந்தன், கோலங்களைப் பார்த்து முகத்தில் மகிழ்ச்சிப் … காணி நிலம் வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.