குடி போதை குலத்துக்கு தீங்கு

குடி போதை ஏற்படுத்தும் தீமைகளைத் திருக்குறள் வடிவில் எடுத்துரைக்கிறார் தா.வ.சாரதி.

தன்மக்கள் வாழ்வை தரமாக வைப்பார்
என்றும் மதுவை நினையார்

எழுவார் விழுவார் எழமுயல்வார் போதை
தழுவுவார் வாழ்வு அழியும்

பெரியோர் சிறியோர் பெயறியாது போதை
ஏறினால் யாவும் கெடும்

தெளிந்த மனதில் தெரிந்தும் புகாது
களித்திடும் போதைப் பொருள்

எதுவும் எளிதாகும் எல்லாம் நலமாகும்
மதுவை விடுவார் தமக்கு

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.