கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!!
தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.
கரு முதல் சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை வழிபட்டால் போதும்.
கரு உருவாக – கருவளர்ச்சேரி
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற – திருக்கருக்காவூர்
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு – வைத்தீஸ்வரன் கோவில்
ஞானம் பெற – சுவாமிமலை
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு – கூத்தனூர் சரஸ்வதி கோயில்
எடுத்த காரியம் வெற்றி பெற மனதைரியம் கிடைக்க. – பட்டீஸ்வரம்
உயர் பதவியை அடைய – கும்பகோணம் பிரம்மன் கோயில்
செல்வம் பெறுவதற்கு – ஒப்பிலியப்பன் கோவில்
கடன் நிவர்த்தி பெற – திருச்சேறை சரபரமேஸ்வரர்
இழந்த செல்வத்தை மீண்டும் பெற – திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி
பெண்கள் ருது பிரச்சினைகள் தீர – கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை)
திருமணத்தடைகள் நீங்க – திருமணஞ்சேரி
மனைவி, கணவன் ஒற்றுமை பெற – திருச்சத்திமுற்றம்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – திருவலஞ்சுழி
பாவங்கள் அகல – கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்
நீண்ட ஆயுள் பெற – திருக்கடையூர்
இறைவனை வணங்குவோம்!
இன்பம் பெறுவோம்!!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!