சமுத்திரத்தின் கடைசித் துளி!

கண்ணியம் இழந்த

பொதுநல நோக்கும்

காலாவதியாய்ப் போன

மனிதநேயமும்

இயற்கையை

செலவினமாக்கி

செயற்கையை

வரவினமாக்கி

சுயலாபம் ஒன்றையே

கடிவாளம் இட்ட

மனிதனது முகம்

விழிக்க விரும்பாது

மரித்துப் போக நினைத்தது

சமுத்திரத்தின் கடைசித் துளி!

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

மஞ்சுளா ரமேஷ் அவர்களின் படைப்புகள்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.