இருக்கைகள் தவிர இருப்பவர்கள்
உயிர்ப்போடு இருந்தால்
அதுவும் சொர்க்கம் தான்!
சார்! மேடம்! சாரி! என்ற
அலுவலக வார்த்தைகள் குறைந்து
அண்ணே! தம்பி! உனக்கென்ன
எனக்கென்ன என்பதான
வார்த்தைகள் வளமாக இருக்கும்
இடமே சொர்க்கத்தின் வாசல்படி!
என் தம்பி என்னை மாதிரி தான் இருப்பான்!
லீவு போட்டாக்கூட அண்ணன்
இல்லாமல் போட மாட்டான் பாசக்கார பய!
இப்படியான உரையாடல்
சொர்கத்தின் முதல்படி
நான் தான் மடையன்னா
எங்கூடயே இருக்குற
இவன் வாத்து மடையனா இருக்கான் என
தனது உதவியாளரை திட்டும்
உயர் அலுவலரின் குரல்
இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்!
அந்த உதவியாளரின் காதுகளில்
முன்னாள் சிவகாசி தொழிற்சாலைகள் ஆய்வுத்துறை
துணைத்தலைமை ஆய்வாளர் அய்யா கு.சித்தையன்
காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்
கோலங்கள் மாறும் கொள்கைகள் மாறும்
உறவென பழகிய
உள்ளங்கள் மாறாது எப்போதும் மறக்காது
அன்பை விதைத்து அதனையே
விளைவாக பெற்று உணர்வோடு வாழ
சொர்க்கம் என்பது நமக்கு
சூழ வாழும் மனிதரால் நிலைக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!