தாமரையாள் வீற்றிருப்பாள்
திருமால் மார்பில்
தாராள அருள் தந்து
நம்மைக் காக்க !
பேராளன்
பேர்சொல்லி ஏங்கினாலும்
பேரொளியாள் திருக்கண்ணால்
அமையும் எல்லாம் !
சீராமன் சீற்றத்தால்
அரக்கர் வீழ்வர்
சீதேவி துணையிருந்தால்
இரக்கம் வாழ்வர் !
மாதேவி மாகாக்க
திருமா லுடனே
மாலழகி நலம்தந்து
அருள்வாள் காண்பீர் !
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com