திருவிளக்கு

1. திருவிளக்குகள் இரண்டு பூஜையறையில் சுடர் விட்டுப் பிரகாசித்தால் அங்கே சகல சம்பத்துக்களும் பொங்கிப் பெருகும்.

2. திருவிளக்கின் அடிப்பகுதி – சரஸ்வதி பிரம்மா அம்சம்

3. திருவிளக்கின் தண்டுப்பகுதி – லட்சுமி பெருமாளின் அம்சம்

4. திருவிளக்கின் குழிப்பகுதி – பார்வதி சிவன் அம்சம்

5. திருவிளக்கின் சுடரில் லட்சுமியும், அதன் ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் பிரசன்னமாவர்.

6. நெய் தீபம் – சகலவித சுகமும் ஏற்படும்

7. நல்லெண்ணெய் தீபம் – எல்லாப் பீடைகளும் விலகும்

8. விளக்கெண்ணெய் தீபம் – புகழ், அபிவிருத்தி உண்டாகும்

9. கடலெண்ணெய் தீபம் – கூடாது, வறுமை, கடன் ஏற்படும்

10. நெய், இலுப்பை, விளக்கெண்ணெய் – மூன்றும் கலந்த தீபம் ஏற்றச் செல்வம் பெருகும்

12. நெய், இலுப்பை, விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆக ஐந்தும் கலந்த தீபம் ஏற்றி 45 நாட்கள் அம்மனை வணங்கினால் அம்மன் அருள் கிடைக்கும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.