தீமை ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்

பள்ளிக்கூட வாசலிலே வெடி போடணும் ‍- அதை

பார்க்கும் மூடர் கூட்டமெல்லாம் துள்ளி ஓடணும்

எள்ளி நகையாடிடவே நாம கூடணும் ‍- அங்க‌

எட்டி நின்னு வெடி போட்டு ரசித்திடணும்

 

வெல்லம்போல இனித்திட பாடம் சொல்லிடும் – தமிழ்

வாத்தியாரை நம்ம கூட சேர்த்துக்கிடணும்

தெள்ளத் தெளிவாகத் தினம் பாடித்திரியும் – அந்த‌

தேன்சிட்டும் வெடிச்சத்தம் கேட்டுச் சிரிக்கும்

 

உள்ளபடி நல்லவங்க ஒன்று சேரணும் – தீமை

ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்

கள்ளமில்லாப் பிள்ளைகள் எங்களைப்போல் – இனி

காலம் முழுதும் இந்த ஊரும் வாழணும்

– இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.