தடைகளின் போது
நமக்குத் தேவை
தீர்வா?
தீர்ப்பா?
தீர்வு என்பது
நமக்கு என்ன தேவை என
நாம் முடிவெடுப்பது
தீர்ப்பு என்பது
பிறரால் முடிவு செய்யப்பட்டது
தீர்வு ஆயிரம் கிடைக்கும்!
தீர்ப்பு ஒன்று மட்டுமே!
ஆயிரம் பேரிடம்
ஆலோசனை பெற்று
நாம் எடுக்கும் முடிவு தீர்வு!
ஆயிரம் பேர் கூடி நம்மீது
திணிக்கப்படுவது தீர்ப்பு!
நமக்குத் தேவையான தீர்வு எவ்விதமானது?
அதன் விளைவுகள் என்ன?
விளைவுகளுக்கு பின்னர்
நம் நிலைமைதான் என்ன?
என நாம் சிந்தித்து
தீர்வின் பொருட்டு
நம் தூக்கம் கெடாது என
உறுதி செய்து மேற்கொள்ளும்
நல்ல தீர்வு மீது நல்ல தீர்ப்பே
என்றும் கிடைக்கும்!
மகிழ்ச்சி நிலைக்கும்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!