தெய்வத்திற்கு படையல் போடுவது ஏன்?

இஷ்ட தெய்வத்திற்கு படையல் போடுவது ஏன்?

இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்வது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. பூஜையில் வைக்கப்படும் படையலை கடவுள் ஏற்றுக் கொள்வதாக நம்புகிறோம்.

அதை பிரசாதமாக சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று ஆத்மார்த்தமாக நைவேத்தியம் படைக்கிறோம்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு உணவு பொருள் பிடித்தமானதாக இருக்கின்றது.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் பிடிக்கும்.

விஷ்ணு பகவானுக்கு பாலும் பாயாசமும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.

விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு கொழுக்கட்டை.

அம்மனுக்கு கூழ்.

கடவுளுக்குப் பிடித்தமான படையல் போடும்போது சாதாரண உணவுகூட சக்தி பெற்று பிரசாதமாக மாறுகிறது.

சாதாரணமாக நைவேத்தியம் படைத்தாலும், படையல் போட்டாலும் கட்டாயம் வாழை இலையில்தான் படையல் போட வேண்டும்.

படையல் போட்டதும் மூடி வைத்தால் இறை ஆற்றல் நைவேத்தியத்தில் கலக்கும் என்பது நம்பிக்கை.

படையல் போடும் பொழுது வாழை இலையில் உப்பு பரிமாறக் கூடாது.

வாழை இலை போடு முன் சிறிதாக கோலமிட்டு, அந்த கோலத்தின் மேல் வாழை இலையைப் பரப்பி படையல் போடுவது சரியான முறையாகும்.

வாழை இலையின் காம்பு பகுதி கடவுளையும், அதன் நுனிப்பகுதி நம்மையும் பார்த்து போட வேண்டும்.

படையல் போட்டதும் தீர்த்தம் வைத்திருக்கும் தீர்த்த நீரை வாழை இலையை சுற்றி சிறிதளவு தெளித்து விட வேண்டும்.

படையலுடன் துளசி இலைகளையும் வைக்கலாம். அதேபோல் இறைவனின் பாதங்களில் துளசி இலைகளை வைப்பது நல்லது.

இறைவனுக்குப் படையல் போடும் உணவில் உப்பு, காரம், எண்ணெய் மிகவும் குறைந்த அளவே சேர்க்க வேண்டும். இந்தப் பொருட்களில் சாத்வீக குணம் கிடையாது என்பதே இதன் அளவைக் குறைப்பதற்குக் காரணம்.

இவற்றையெல்லாம் முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் சாதாரண உணவுப்பொருள் பிரசாதமாக மாறுகிறது.

இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் முழுமையாக இறைவனைச் சென்றடைகிறது என்ற நம்பிக்கையுடனும் பக்தியுடனும் படைக்கப்படுவது நல்லது.

‘கடவுள் சாப்பிடப் போகிறாரா?’ என்று எண்ணியபடி போடாதீர்கள்.

எந்த அளவு சிரத்தையுடன் நீங்கள் நைவேத்தியம் செய்து படைக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி நிம்மதி கிடைக்கும். இறைவனின் அருள் முழுமையாகக் கிட்டும்.