தெரிந்து தெளிவோம் – கவிதை

தெரியாமல் செய்வது தவறு
தெரிந்து செய்வது தப்பு

தவறு செய்பவரை மன்னித்து விடு
தப்பு செய்தவரை விலக்கி விடு

தப்புக்களின் எண்ணிக்கை உயர‌
முழுமுதல் காரணம் மன்னிப்பு

துரோகியை மன்னித்து
கூட வைப்பவன் வாழ்க்கை
இருப்பது போல‌
இல்லாமல் கெடும்

முட்டாள்கள் இருக்கும் வரை
துரோகிகள் வாழ்வார்கள்

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

One Reply to “தெரிந்து தெளிவோம் – கவிதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: