நட்சத்திரம் – கவிதை

நட்சத்திரம் அது ஒளிரும்

கூரான மேல்படிப்புகளை

கொண்டிருக்கின்றது

ஒரு ஏமாளி மற்றும்

ஒன்றும் அரியாதவனின் முன்

அந்நட்சத்திரம் பெரிதல்ல

இனிமை அது அழகு

ஆபத்து நேரும்போது

எதுவுமே அழகல்ல

தேங்கிய குட்டை நீரில்

தெரிகிறது எளிதான நட்சத்திரம்

கணக்கியல் சூத்திரங்கள்

போதவில்லை எனில்

நீ வா நாம் வானை நோக்கி

தலையை உயர்த்துவோம்

என் கண்கள் ஒளிர்கிறது

அந்நட்சத்திரத்தைப் போல்

நான் நிற்கிறேன் விண்ணில்

புஷ்பால ஜெயக்குமார்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.