முயல் ஆமை கதை நாம் அனைவரும் அறிந்ததே.
முயல் தூங்கியதால் ஆமை வென்றது.
கதையின் நீதி?
கவனம் சிதறினால் திறமைசாலிகளும் தோல்வியடையக் கூடும்.
இரண்டாம் முறையாக பந்தயம் நடைபெற்றது.
கவனமாக இருந்ததால் முயல் வென்றது.
கதையின் நீதி?
திறமையுள்ளது நிச்சயம் வெல்லும்.
முன்றாம் முறை பந்தயம் நடந்தது.
ஆனால் தரைப் பகுதி மற்றும் நீர்வழிப் பகுதி என பந்தயப் பாதை மாற்றம் செய்யப்பட்டது.
நீச்சல் தெரியாத முயல் தோற்றது.
கதையின் நீதி?
வெற்றியைத் தீர்மானிப்பது திறமை மட்டுமல்ல; சூழலும் கூட.
நான்காம் முறையாக பகுதி நீர் வழிப் பாதை பகுதி நிலப் பாதையில் பந்தயம் நடைபெற்றது.
நீர் வழிப் பாதையில் ஆமை முயலை சுமந்து சென்றது. நிலப் பகுதியில் முயல் ஆமையினை சுமந்து சென்றது. இருவருமே வென்றனர்.
கதையின் நீதி?
வெற்றி பெற யாரையும் தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நட்புணர்வு மேம்பட எதையும் வெல்லலாம். (That is Win-Win Policy)
நம் வெற்றி யாருக்கும் தோல்வி தராது எனில் அதில் துயரம் ஏது?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942