தேவதையின் பாதத்திற்கு
பக்தனான நொடிகளிலிருந்து
பித்தனென நித்தம் நூறு
பிதற்றல் மொழியில்
கிறுக்கல்கள் கிறுக்கியப் பின்னும்
சிறுக்கி மகளின்
வெள்ளிக் கொலுசினோசைக்கு
முத்தத்தாலொரு சந்தக்கவி
செய்யாமல் போனதுக்கு
நரம்பறுந்த வீணை போல்
குரலற்றுக் கிடக்கிறது
என் ஆன்மாவின்
அழகிய மொழி…
கவிஞர் விசித்திரக்கவி
கைபேசி: 9080231403
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!