நான் நானாகத் தான் இருந்தேன்…

முழு நிலா

குரு பிரசாந் எழுதிய குறுங்கவிதைகள்.

தூக்கம் மெல்லமான மரணத்தின் சாயல்…

அதிலும் உன்னோடு இருந்த நிமிடங்கள்

ஒரு நொடியில் பிரமையாவது கொடுஞ்சாவு!

யாவும் கைவிட்ட பின்பும் உயிர்த்திருக்கும்

அடம் தான் தூர்ந்த கிணற்றுக்குள்

வேர்பிடித்த இந்தச் செடிக்கும்!

கூட்டைச் சேர்வதுதான் இலக்கென்று

சிறகடித்துக் கொண்டிருந்தது

ஒவ்வொரு பறவையும்…

எல்லாவற்றையும் கடந்து போகவிட்டு

அனாயாசமாகக் கூவிக் கொண்டிருந்தது

ஒரு குயில் மட்டும்!

சிரிப்பை நிரந்தரமாகத் தருவதற்குச்

சிற்பியால் மட்டும் முடிகிறது

கடவுளுக்கும் சேர்த்தே!

ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.