பகட்டான சிறை – ஹைக்கூ கவிதை

பகட்டான சிறை

மழை பொழிகிறது

மகிழ்ச்சி இல்லை

ஒழுகின்ற ஓடு

 

மகிழ்ச்சி தரவில்லை

மகிழுந்து பயணம்

முதல்நிலை ஓட்டுநர்

 

தொடரும் நண்பன்

தொட நினைத்தும் முடியவில்லை

நிழல்

 

பணம் கொடுத்து அனுப்பப்படும்

பகட்டான சிறை

மழலையர் பள்ளி

 

அடிமை என்றே தெரியாமல்

முதலாளிக்கு ஊழியம் புரியும்

பன்னாட்டு நிறுவன ஊழியர்

 

கரம் பிடித்த பின்

கனவு கலைந்தது

ஆவணக் கொலை

தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம்

 

Comments

“பகட்டான சிறை – ஹைக்கூ கவிதை” அதற்கு 8 மறுமொழிகள்

  1. Sakthi Bahadur

    சிறப்பான துவக்கம் வாழ்த்துகள் தோழர்…

  2. Hafeez Mohamed

    சிறப்பு

  3. ரா.சண்முகலட்சுமி

    அருமை மா.நல்லதொரு ஆரம்பம்.தொடரட்டும் உங்களின் இலக்கிய பயணம்.வாழ்த்துகள் 💐💐💐👌👌👏👏👍👍🤝😍

    ரா.சண்முகலட்சுமி
    அம்பத்தூர்,சென்னை
    9840263431

  4. Shanthi Saravanan

    அருமையான ஹைக்கூ கவிதைகள். வாழ்த்துகள் தோழர்

  5. அக்கு ஹீலர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம்.

    உள்ளத்தில் உள்ளதெல்லாம் வெள்ளமாய்க் கொட்டுது மகளே…. தொடரட்டும் கலைநயத்துடன் கூடிய உன் சமூகப் பார்வை….

  6. ஜியா முஹம்மத்

    மிகவும் அற்புதம் தோழர்…
    குறிப்பாக அந்த மழலை பள்ளி, தொடரும் நிழல், ஒழுகும் வீடு சிறப்பு.

  7. Dhanalakshmi.

    அக்கு ஹீலர்.சொ.வே.தனலெட்சுமி-திருச்சி.

    அருமை தோழர்,
    குறிப்பாக,
    மழலையர் பள்ளி – மிகச் சிறப்பு !!
    நம் குழந்தைகளை அச்சிறையிலிருந்து விடுவித்துவிட்டாலே மற்றவை அனைத்தும் நலமாகும்.

  8. Krishnaveni

    அக்கு ஹீலர் கிருஷ்ணவேணி கம்பம்

    மழை பொழிகிறது மகிழ்ச்சி இல்லை ஒழுகின்ற‌ஓடு. கவிதை
    யில் வறுமை வாழ்க்கையை பிரதிபலித்துள்ளீர்கள். நல்ல நல்ல
    கவிதைகள் வாழ்த்துக்கள் பா சுமையா . மேலும் சிறக்க
    வாழ்த்துக்கள் பா.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.