படைப்புகளை அனுப்ப
வாட்சப் : 9943906900
மின்னஞ்சல் : admin@inidhu.com
எழுதத் தயங்காதீர்கள்!
உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.
நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கலாம்; அல்லது இதுவரை எதுவுமே எழுதாதவராக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால், இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது.
மனிதகுலத்துக்குத் தேவையான எதைப்பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்.
உங்களின் ஒரு சிறு படைப்பு, யாரோ ஒருவரின் மனதில் விதையாய் விழுந்து, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.
எழுத்துப் பிழை வரலாம் எனப் பயப்படாதீர்கள். நாங்கள் அதை சரிசெய்து கொள்கிறோம்.
மிக நீண்ட பயணத்தின் முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்கள் திறமையின் எல்லை விரிந்து கொண்டே செல்லட்டும்.
எதை எழுதுவது?
எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள்.
உங்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கின்றதா? அதைப் பற்றி எழுதுங்கள்.
சுயமுன்னேற்றம் பற்றி எழுதுங்கள்.
உடல்நலம் மற்றும் உணவு பற்றி எழுதுங்கள்.
உங்கள் பயணம் பற்றி எழுதுங்கள் அல்லது புகைப்படம் , காணொளி அனுப்புங்கள்.
இந்தப் பூமியைக் காக்கும் வண்ணம் சுற்றுச்சூழல் பற்றி எழுதுங்கள்.
இலக்கியம் பற்றி எழுதுங்கள் அல்லது புதிய இலக்கியம் படையுங்கள்.
இருபத்திரண்டாம் நூற்றாண்டிலும் தமிழ் தரணியில் நிலைக்க வேண்டுமானால், அதைக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகச் சிறுவர் இலக்கியம் படையுங்கள்.
எல்லாம் அவன் செயல் என்று ஆன்மிகம் பற்றி எழுதுங்கள்.
அறிவியல் பேசும் தகுதி தமிழுக்கு உண்டு என்று நிரூபிக்கும் வண்ணம் அறிவியல் கட்டுரைகள் எழுதுங்கள்.
ஆய்வுக் கட்டுரைகள் எழுதுங்கள்.
நூல் மதிப்புரை எழுதுங்கள்.
இவை தாண்டி எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள். அது மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்தாக இருக்க வேண்டும்; அவ்வளவுதான்.
எப்படி எழுதுவது?
உங்கள் கருத்தை, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். எது உங்களுக்கு எளிதாக உள்ளதோ, அந்த வடிவிலேயே எழுதுங்கள்.
கட்டுரையாக எழுதலாம்.
கவிதையாக எழுதலாம்.
கதையாக எழுதலாம்.
ஓவியமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
நல்ல புகைப்படத்தை, காணொளியை உருவாக்கலாம்.
படைப்புகளை அனுப்ப
மின்னஞ்சல் : admin@inidhu.com
வாட்சப் : 9943906900
தபாலில் அனுப்ப:
இனிது இணைய இதழ்
ரோவன் சாப்ட்வேர் சொலுசன்ஸ்
4 / 1332 சாமிபுரம் காலனி
சிவகாசி – 626189
தங்களுக்கு கணினியில் நல்ல பரிச்சயம் உண்டு என்றால், தயவுசெய்து தட்டச்சு செய்து அனுப்பவும்.
உங்கள் படைப்புகள் பாமினி அல்லது யுனிகோடில் இருந்தால் நல்லது.
யுனிகோடில் தட்டச்சு செய்ய முரசு , ஈகலப்பை , அழகி, NHM Writer ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.
www.tamileditor.org என்ற இணையதளத்தை தட்டச்சு செய்ய உபயோகிக்கலாம். நாங்கள் இந்த தளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றோம்.
ஏற்கெனவே வேறு இதழில் தங்கள் படைப்பு பிரசுரம் ஆகி இருந்தால், தயவு செய்து அதனை அனுப்ப வேண்டாம்.
தாள்களில் எழுதி அனுப்புவதாக இருந்தால் தயவுசெய்து முதலில் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களின் சந்தேகங்களுக்குத் தயங்காமல் என்னுடைய அலைபேசி எண் 9943906900 மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
மகிழ்வுடன் உங்களது படைப்புகளை வரவேற்கிறோம்.
சிறகை விரிப்போம்; வானம் நமதே!
அன்புடன்
வ.முனீஸ்வரன்
ஆசிரியர்
இனிது இணைய இதழ்
இனிது இணைய இதழுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
எதைப்பற்றி வேண்டுமானாலும்
எழுதலாம் எனும் பொழுதே மனம்
வானில் சிறகை விரிக்கிறது!
ஒரு படைப்பாளியின் ஆரம்ப கட்ட எழுத்துக்களை வரவேற்றுப் பதிவிடுவது, ஒரு பெரிய மரத்தின் கனவுகளை சின்ன விதைகளாக ஊன்றி ,நீர் ஊற்றி பாதுகாத்து அழகு பார்ப்பதற்கு சமம் .
என்னுடைய முதல் சிறுகதை “தனிமரம்“வெளியானபோது எனக்குள் அவ்வளவு மகிழ்ச்சி.
ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் விருது வாசகர் வார்த்தைகளே.
எனக்கு கிடைத்த ஒரு சில வாழ்த்துக்கள், நான் விருது பெற்றதைப் போல என்னை உணர வைத்தன.
இனிது இணைய இதழைப் பற்றி, திறந்த மனதோடு தென்றல் காற்றை அனுப்பி, இன்னும் சொல்ல முடியாத வாழ்த்துக்களை என் மனம் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும்.
இனிது ஆசிரியர் அவர்கள் இன்னும் தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட வாழ்த்துங்கள்.
ஓர் இதழை நடத்தி வாராவாரம் பதிப்பிப்பது என்பது சாதாரணம் அல்ல. அதற்கு பரந்துபட்ட மனப்பான்மை வேண்டும்.
அது உங்களிடம் இருக்கிறது.
வண்ண வண்ண வாசம் வீசும் பூக்களை, நீங்கள் போகும் இடமெல்லாம் தென்றல் காற்றோடு அனுப்பி வைத்து வாழ்த்துகிறேன்.
தமிழகமெங்கும் இனிது தமிழோடு தவழட்டும்.
இனிது இணைய இதழ் இந்தியாவெங்கும் பரவட்டும்
மனித மனங்களில் தென்றலாய்.
வாசகனுக்கு மட்டும் தெரியும் புத்தகங்கள் காதலியென்று.
வாசகிக்கு மட்டும் தெரியும் புத்தகங்கள் காதலனென்று.
இதயத்திற்கு நெருக்கமாய் இருக்கும்
இனிதுவின் பயணம் இனிமையாகத் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்…………………!!!
சந்திர மௌலீஸ்வரன் – ம கி.
15அக்டோபர் 2021-வெள்ளி
வணக்கம்.
நவ ராத்திரி விழா நல்வாழ்த்துக்கள்!
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
தமிழ் இலக்கிய இணைய இதழ்களைப் பற்றி அறிய விரும்பி இணையத்தில் தேடிய போது உங்கள் “இனிது இணைய இதழ்” எனக்கு அறிமுகம் ஆனது.
அமைப்பும் பொருளடக்கமும் நனறாக உள்ளன. பல்துறைத் தலைப்புக்களிலும் எளிய தமிழில் தகவல்களைப் பதிப்பிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தமது கருத்துக்களையும் ஆக்கங்களையும் உருவாக்கும் இளைஞர்களுக்கு, அவற்றை இணையத்தில் பதிவிட உங்களுடைய “இனிது இணைய இதழ்” பெரிதும் உதவி வருவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நான், தமிழ் ஆர்வலன். அதுவும் இணையத்தில் நல்ல தமிழ் நிலைபெறவேண்டும் என்பதற்காகவும், “இளைஞர் தலைமுறை, தமிழ்ச் சமுதாயம்” தன் பாரம்பரியத் தொடர்\பையும் வேரடி மண்ணையும் இழக்கக் கூடாது என்பதற்காகவும் என் மனைவி, மகள் மற்றும் தமிழ் ஆரவல நண்பர்களுடனும் இணையத்தின் பல்வேறு தளங்களில் தொடர்ந்து தமிழில் பதிவுகள் இடுவது எங்கள் பணிகளில் ஒன்று.
இணையப் பணிகளிலும் கணினிப் பயன்பாட்டிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இருக்கிறோம்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு கிராமங்களில் இளையோருக்காகப் பயிற்சி நிறுவனங்களை நடத்தி வருகிறோம். அவற்றில் தமிழ்வழிக் கல்விக்கு மிகவும் முன்னிரிமை தந்துள்ளோம்.
எங்களுடைய பாரம்பரியத் தொழிலாக இயற்கை வேளாண்மையையும் இயற்கை மருத்துவத்தைதும் கைக் கொண்டுள்ளோம்.
இந்த அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலால் இன்று உங்களுடன் தொடர்பு கொள்கிறோம்.
அவ்வப்போது பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு துறைகளிலும் கட்டுரை, கவிதை, ஆய்வுக் கட்டுரை, இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம், மனநலம், உடல்நலம் முதலிய தலைப்புக்களில் எழுதலாம் என்றிருக்கிறோம்.
அன்புடன்,
சந்திர மௌலீஸ்வரன் பவானி உமா மகேஸ்வரி – ம கி.
உங்கள் இதழுக்கு வாழ்த்துக்கள்!
ஒரு படைப்பாளி என்னும் விளக்கில் இருக்கும் திரியை நன்றாக சுடர் விட்டு எரிய தூண்டுக்கோலாக இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றிகள்!
🙏🏿🙏🏿🙏🏿
வணக்கம்,
இன்று தங்களின் இனிது இணைய இதழ் பார்த்தேன். மிகச்சிறப்பு. பெரிய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இன்றைய சூழ்நிலையில் எதைப்பற்றியும் எழுதலாம், யாராகவும் எழுதலாம் என்று கூறியிருப்பது உண்மையில் பாராட்டுக்குறியது.
இந்த ஒரு வார்த்தை வளரும் படைப்பாளிகளின் உலகத்தை மாற்றிக்காட்டும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
உங்கள் பணி சிறக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள். என் பயணம் இனி உங்களுடன் தொடரும்.
அன்புடன்
சிந்தனைக்கவிஞர்
பறம்பு நடராசன், காரைக்குடி,
நாள் 02-02-2023