பனீர் பிரியாணி செய்வது எப்படி?

பனீர் பிரியாணி என்பது பனீரைக் கொண்டு செய்யப்படும் கலவை சாத வகையாகும்.

பனீர் சைவப் பிரியர்களுக்கு பிடித்தமான மசாலா உணவு வகைகளுள் ஒன்று. சுவையான எளிய வகையில் பனீர் பிரியாணி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சம்பா பிரியாணி அரிசி – 400 கிராம் (ஒரு பங்கு)

பனீர் – 100 கிராம்

எலுமிச்சை பழம் – ½ மூடி

நெய் – 50 கிராம்

கொத்த மல்லி இலை – 10 தண்டுகள் (மீடியம் சைஸ்)

புதினா இலை – 20 எண்ணம்

மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் பால் – இரண்டு பங்கு

மசால் அரைக்க

பெருஞ்சீரகம் – 4 ஸ்பூன்

பட்டை – ஆள்காட்டி விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

அன்னாசிப்பூ – 1 எண்ணம்

கல்பாசி – சிறிதளவு

சாதிப்பத்ரி – 3 இதழ்கள்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

கசகசா – 2 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 6 எண்ணம்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

முந்திரிப் பருப்பு – 2 எண்ணம்

கறிவேப்பிலை – 2 கீற்று

பிரிஞ்சி இலை – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

பனீர் பிரியாணி செய்முறை

முதலில் பிரியாணி அரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிடவும்.

அதில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து விட்டு அரிசியை குலுக்கி எல்லா இடத்திலும் எலுமிச்சை சாறு பரவும்படி செய்யவும்.

கொத்தமல்லி, புதினா இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பனீரை சதுரங்களாக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து காம்பு நீக்கிய பச்சை மிளகாயுடன் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி தோல் நீக்கிய வெள்ளைப் பூண்டுடன் மையாக்கிக் கொள்ளவும்.

கசகசாவை சிறிதளவு நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து, அதனுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சிப்பூ, கடல்பாசி, சாதிப்பத்ரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 

பன்னீர்
பனீர்

 

 

அரைத்த கலவைகள்
அரைத்த கலவைகள்

 

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.

 

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

 

பின்னர் அதனுடன் அரைத்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கலவையைச் சேர்த்து வதக்கவும்.

 

சின்ன வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கும் போது
சின்ன வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கும் போது

 

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கும் போது
இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கும் போது

 

பின்னர் கசகசா, முந்திரிப்பருப்பு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் தேங்காய்ப்பால், மஞ்சள் பொடி, பரபரப்பாக அரைத்து வைத்துள்ள கரம் மசாலாப் பொடி, பன்னீர்த் துண்டுகள், பிரியாணி அரிசி, தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் குக்கரை மூடி விசில் வந்ததும் சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

 

குக்கரை மூடும் முன்
குக்கரை மூடும் முன்

 

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பனீர் பிரியாணியை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

பன்னீர் பிரியாணி
பனீர் பிரியாணி

 

சுவையான பன்னீர் பிரியாணி
சுவையான பனீர் பிரியாணி

 

சுவையான பனீர் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி, காளான் கிரேவி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

பிரியாணிக்கு வடபூண்டினை அல்லது பிரியாணிப் பூண்டினைச் சேர்த்து பிரியாணி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.