பயமென்றொரு மாயவிலங்கு!

பயணித்துக் கொண்டிருந்தன
செம்மறியாடுகள்
கட்டுப்பட்டுவிட்டதற்கான
பின் தொடர்வில்
மந்தையாக!

அடிவாங்கியது
வழிமாற
முயன்ற ஆடு
பிற‌ ஆடுகள்
கத்துமாறு!

சொரணையற்ற
கிடா
அடி வாங்கியே
முயன்றது
வீரியத்தோடு!

மேய்ப்பனின்
துரித விரட்டல்
அவசரம்
புரிந்தது

இருளிற்கு‌ முன்பு
இருப்பிடம்
சேர்த்துவிட வேண்டிய
அக்கறை!

சிதறிய செம்மறி ஆடுகள்
சிலது
செத்துப்போயின
பேருந்தில்
மோதி
விபரீத விபத்தென!

பெரிதாக
காரணம்‌ தெரியவில்லை.
பேருந்தில்
விழுந்ததற்கு
பிரம்பொன்று வழியில்
கிடந்ததைத் தவிர…

ரவி அல்லது
ravialladhu@gmail.com

கவிஞரின் பிற கவிதைகள்:

நடந்து விடாதா அந்நற்கூத்து?
காய்ந்திடாத ஈரம்
யாவுமிருந்தும் தவித்து…

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.