பயம்…
அவ்வப்போது வரும்
எதன் பொருட்டு?
எப்போது?
எதற்காக வரும்?
ஒன்றைப் பற்றி முழுமையாக அறியாத போது
எதிர் விளைவு என்னவாக இருக்கும்
என்று அறிய இயலாத போது
நாம் அறியாத செயல்களை செய்யும் போது
வரக்கூடியது பயம்!
பாம்புகளைப்பற்றி முழுமையாக
அறியாத நமக்கு பயம்
அது குறித்து அறிந்த சீன மக்களுக்கு?
அது கடித்தால் விஷம் என்று
விளைவை எண்ணி நமக்கு பயம்
தோலுரித்து உண்பவர்க்கு?
அதை எப்படி கையாள்வது என
அறியாத நமக்கு பயம்!
அறிந்தவர்களுக்கு விளையாட்டு!
இதுவே எல்லா வித பயத்திற்கும் அடிப்படை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
என்ற கண்ணதாசன் வரிகளின் படி நாம்
இயன்றவரை பயமின்றி வாழ
நலமே விளையும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!