ஒத்தைப்பனை ஓரத்துல நித்தம் ஒரு சத்தம் கேட்கும்
அது என்னன்னு இப்ப நாம பாக்கலாமா? - அந்த
சத்தத்துக்கு ஏத்த தாளம் போடலாமா?
சந்தோசமாக அங்க தூங்கலாமா?
கத்துங்குருவி சத்தம் எங்க போச்சு? - அந்த
கானாங் குயிலுக் கூட்டம் என்ன ஆச்சு?
அத்துவான காடும் ஏன் அமைதியாச்சு? – அதில்
ஆடிப்பாடும் பறவை ஏன் முடமாகிப் போச்சு?
மெல்ல ஓடும் ஆறும் இப்போ எங்க போச்சு? – அதில்
மீன்கள் விளையாடிடுமே! என்ன ஆச்சு?
முள்நிறைஞ்ச இண்டங்காடு மொட்டையாச்சு – இப்போ
மொத்தமாக காடு ஏன் மலடாச்சு?
நன்னாரி வாசனையே அத்து போச்சு – சின்ன
நாயுருவி செடியும் காஞ்சு போச்சு
பொன்வண்டு கூட்டத்தோடு அழிஞ்சிடுச்சு – இங்க
பூக்களோடு எருக்கே நிறைஞ்சிருக்கு
ஒத்தப்பனை வெத்துப்பனை ஆயிருச்சே
ஓயாத பாட்டு சத்தம் நின்னு போச்சே
மொத்தத்துல இத்தனையும் நாம் பெறவே
முழுபூமி எங்கும் நோயொன்று பரவிடனும்
சத்தமின்றி இயற்கையும் வெல்ல வேணுமே – நம்
சந்ததிக்கு இயற்கை மீண்டும் வேணுமே
பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே – அதுக்கு
புது நோயொன்று பரவிட வேண்டும் உண்மையே
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!