நம் மன நிம்மதியைக் கெடுக்கும் விஷயங்களோ ஏராளம்!
யார் மீதாவது ஆசையோ கோபமோ வந்தால் அல்லது நமக்குப் பிடிக்காத சம்பவம் ஏதாவது ஒன்று நிகழ்ந்து விட்டால் நம் மனம் படும் பாட்டைச் சொல்லவே முடியாது.
திரும்பத் திரும்ப அந்த நிகழ்வு நம் நெஞ்சத்திரையில் காட்சிகளாக வந்து, நம் மனதை பாதிப்படையச் செய்யும்.
‘என்னால் மீண்டு வர இயலவில்லை!’ என்று நினைக்கத் தூண்டும்.
‘என்னால் மீளவே முடியாமல் தவிக்கிறேன்!’
‘என்னை உயிரோடு கொல்கிறது!’ என்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
‘என்னால் மீள முடியவில்லை!’ என்பதை நிறுத்தி விட்டு, அதிலிருந்து விலகி, ‘சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும்!’ என்ற வைராக்கியத்தை மனதில் வைக்க வேண்டும்.
கடலில் குதித்து உயிருக்குப் போராடுபவன் மீள கையை அசைப்பானா?
அல்லது படகு அனுப்புங்கள் என்பானா?
முதலில் உதவிக்கு அழைக்க வேண்டும்.
‘படகை அனுப்புங்கள்’ என்று சொன்னால் அறியாமை தானே?
நம் மனதிற்கு பிடித்த விஷயங்கள் என்று எவ்வளவோ இருக்கிறது தானே!
ஆன்மீகம், விளையாட்டு, இசை, உணவு, ஊர் சுற்றல், மனதிற்கு பிடித்தவர்களிடம் பேசுவது எனப் பல இருக்கும் தானே!
நாம் யாரிடம் நம் சுகதுக்கங்களை பகிர்கிறோமோ, அவர்களிடம் அடிக்கடி சொல்லிப் பழக வேண்டும்.
பகிரும் துன்பம் பாதியாகும்.
பகிரும் இன்பம் இரட்டிப்பாகும்.
நம் சிந்தனை மாற, களத்தை மாற்றினால் சரிதான்!
மனதைத் திருப்புவோம்!
மகிழ்ச்சியோடு வாழ்வோம்!!
ஞா.கலைச்செல்வி
சென்னை
Comments
“மனதைத் திருப்புவோம்!” மீது ஒரு மறுமொழி
[…] மனதைத் திருப்புவோம்! […]