மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்

அருந்தவம் ஆற்றி னாலும்

அடைந்திடா நலங்க ளெல்லாம்

வரங்களாய் உலகுக் கீந்து

மக்களை வாழ வைக்கும்

மரங்களை எல்லாம் வெட்டி

மனிதர்தாம் அழித்து வந்தால்

குரங்கின்கை மாலை போலக்

குவலயம் ஆகு மம்மா!

ஆழ்த்திடும் பஞ்சம் போக்கும்

பசிப்பிணி அகற்றும் மற்றும்

தாழ்த்திடும் வறுமை நீக்கும்

திருமிகு தருக்கள் சாய்த்து

வீழ்த்திடும் எண்ணம் தன்னை

விட்டுவிட் றின்றே காத்தால்

வாழ்த்துவாள் இயற்கை அன்னை

வளம்பல நமக்குத் தந்தே!

இமயவரம்பன்

Comments

“மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்” மீது ஒரு மறுமொழி

  1. Chandhra Mouleeswaran MK

    சந்திர மௌலீஸ்வரன் ம கி,
    மனமார்ந்த பாராட்டுக்கள், திரு. இமய வரம்பன்!
    “இனிது” இதழிற்கு நான் இன்றுதான் அறிமுகம் ஆகியுள்ளேன்.
    மரபுக் கவிதை, சந்தக் கவிதை, இலக்கணக் கவிதை ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவன்.
    இதில் ஆறு பக்கங்கள் வரை பெருமபலான கவிதைகளைப் படித்ததில், உங்களுடையதுதான் முதன் முதலாக என் கண்களில் பட்டுள்ளது, இனி மேல்தான் மற்றவற்றைப் பார்க்கவேண்டும்.
    சொல்லிற்குச் சொல், அடிக்கு அடி, பாவிற்குப் பா பொருள் அறாமல் தொடர்ந்து ஒரு பொருள்பற்றித் தெளிவாக இக்கவிதையை ஆக்கியுள்ளீர்கள்; பாராட்டுக்கள்!

    உங்களுடைய இந்த வரிகள், இயற்கை மீதான என் கொள்கைகளை அப்படியே எதிரொளிக்கின்றன! பாராட்டுக்கள்!
    “ஆளுக்குப் பத்து மரம் – ஓராண்டில்,
    ஆயிரம் கோடி மரம்!” என்பது எங்கள் அடையாளம்.

    மிக்க நன்றி, வணக்கம்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.