மூளைத் தொழில்

கூறெனப் பாய்ந்து

வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்

பூமி சிறிதானது.

 

பெய்த சிறுநீர்,  பகீரதன்

வரவழைத்த புனித நதியெனப்

பிரவாகமெடுக்கின்றது.

 

பிடரி சிலிர்த்த குதிரைகள்

கோவேறு கழுதையாய் மாறி

தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தன‌.

கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

 

திசையெங்கும் அவள் அரிதாரம்.

கற்றவை மறந்து தேடி அலைகிறாள்

சிவப்புத் தாமரை சரஸ்வதி.

படிச்சிப் படிச்சி நீர்த்தாள்,

சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்

மூளைக்காரனிடம்.

 

கடலுக்குள் நிசப்தமென

அறிவுலகம் துகில் கொள்கிறது.

– பேரா. பாரதிசந்திரன்

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.