வசந்தா நிலையம்

முகப்பில் 1984 ஆண்டு குறிப்பிடப்பட்ட இந்த வசந்தா நிலையத்தில் நாம் காண உள்ள பாத்திரங்களைச் சந்திக்கப் போகிறோம்.

இந்திரா நகரில் வ. உ. சி. தெருவில் உள்ள இந்த வசந்தா நிலையத்தை காலஞ்சென்ற செல்வந்தர் சபாபதி அவர்கள், தமது மனைவியின் பெயரில், பதினைந்து பெரியதும் சிறியதுமான வீடுகளைக் கொண்டதாக கட்டி ஜனங்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தார்.

பொருளாதார கஷ்ட நிலையில் இந்த காம்பவுண்டுக்கு குடி வந்தவர்கள், வாழ்வில் முன்னேறி சொந்த வீடு கட்டி வாழச் சென்றுள்ளார்கள்.

மைய இடத்தில் இருக்கும் இந்த வீடு உள்ள பகுதியை புரோமோட்டரிடம் கொடுத்து விடலாம் என்று சபாபதி அவர்களின் பேரன் கௌஷிக்கிடம் தாங்களாக முன் வந்து ஆலோசனை சொன்னார்கள்.

எந்த நிலையிலும் இந்த காம்பவுண்டை மாற்றியமைக்கக் கூடாது என்று தாத்தா கேட்டுக் கொண்டுள்ளார் என்று யோசனை கூறியவர்களிடம் பொறுமையாகச் சொல்லி அவன் நகர்ந்து விடுவான்.

கௌஷிக், வெளிநாட்டு வேலைக்குப் போவதற்கு முன்பாக, இந்த காம்பவுண்டுக்கு அவனுடைய அப்பா ராஜேந்திரனின் நண்பர் நாராயணனை கேர் டேக்கர் ஆக அமர்த்தி விட்டுச் சென்றான்.

அவர் காம்பவுண்டை பார்த்துக் கொள்வதோடு வாடகை பணத்தை வசூலித்து கௌஷிக்கின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவார். மாதம் ஒருமுறை கௌஷிக் இவரிடம் பேசி விடுவான்.

இனி, நாம் வசந்தா நிலையத்தின் மாந்தரை வரும் வாரங்களில் காண்போம்.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“வசந்தா நிலையம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] நாநா என்கிற நாராயணன் வசந்தா நிலையம் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.