வரம் பெற்றவர்கள்!

வரம் பெற்றவர்கள்

1940-1990க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்.

நாங்கள் சைக்கிள் ஒட்டினோம்; ஹெல்மெட் அணியவில்லை.

பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை நாங்கள் விளையாடினோம். டி.வியின் முன் உட்கார்ந்ததில்லை.

நாங்கள் உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்; இண்டெர்நெட்டில் அல்ல.

நாங்கள் தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம்; மினரல் வாட்டர் அல்ல.

ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம்; எந்த தொற்று நோயும் வந்ததில்லை.

நாங்கள் தினமும் அரிசி சாதம் தின்போம்; ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை.

எங்கு போனாலும் நாங்கள் வெறுங்காலுடன் நடப்போம்; எந்த பாதிப்பும் வந்ததில்லை.

எங்கள் பெற்றோர் எந்த ஊட்டசத்து உணவும் தந்ததில்லை; ஆனாலும் நாங்கள் ஆரோக்கியமாகவே இருந்தோம்.

எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல; ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை.

நாங்கள் பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம்; ஹாஸ்டல் அறைகளில் அல்ல.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி நாங்கள் போவோம்; வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை.

எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான்; ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ணமயமானவைகள்.

எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள்; உங்களைப் போன்று தனிக்குடித்தனம் அல்ல.

எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்.

சுருக்கமாக சொன்னால், நாங்கள் வரையறுக்கப்பட்ட பதிப்புகள் (WE ARE THE LIMITED EDITIONS).

ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

அன்பாக இருங்கள்!