வீதியிலே பிள்ளையாரு – நம்ம
வாசலிலே நிக்குறாரு
பாதியிலே வந்துஇங்க நிற்குறாரு – உன்ன
பார்த்து பேசி போகத்தான் தேடுறாரு
தேதியிப்ப என்னாச்சு – எழுதும்
தேர்வின் நிலை என்னாச்சு
பீதியில உன்முகமோ வாடிப்போச்சு – அதை
போக்கிடத்தான் பிள்ளையாரும் வந்தாச்சு
மோதி நிற்கும் ஆங்கிலமோ – இனி
முத்தம் தரும் நிலை வரும்
வேதியியலும் உன்னோடு கைகோர்க்க – இனி
வேண்டுமென நல்லவரம் கேட்டுப்பாரு
ஆதி முதல் அந்தம் வரை -இவ்வுலகில்
அழகு கணக்கின்றி ஏதுமில்லை
பாதியில நிற்காம ஓடச்செய்ய – நீ
பக்குவமா ஒருவரம் கேட்டுப்பாரு
சேதி எல்லாம் செய்தியாகும் – அதில்
சேர்வது எல்லாம் வரலாறாம்
போதிமரம் புத்தனுக்கு தந்த அறிவை – உனக்கு
புத்தகமே தந்திடனும் கேட்டுப் பாரு
-இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!