பெற்றவளை மம்மி என்றபோது
விதண்டா வாதமாய்
தொழுவத்திலிருந்த பசு
அம்மா என்றது!
ஆடு
கவிதை போல் போட்டது
ஒன்றின்கீழ் ஒன்றாக
புழுக்கை!
எலியின் தானியச் சுரங்கத்தில்
எதிர்பாராத் திருப்பம்
சாரைப்பாம்பு!
எறும்பு ஊர்ந்துத் திரித்தக் கயிரை
எடுக்க முயன்றுத் தோற்றுப் போனது
அம்மணக் குழந்தை!
பற்ற வைத்த நெருப்பில்
கீச்சரங் குருவிகளிரண்டு
உடன் கட்டை ஏறுதல் தவிர்க்கப்பட்டது
அந்தி மழை!
சிறுமி விட்ட கப்பல்
குழாய் தண்ணீர் எட்டிப் பார்க்காத
குட்டையில்
தளும்பி நிற்கிறது!
கண்ணாடி பார்.
பூமி, பம்பரத்தை விட வேகமாக
சுழல்கிறது!
கவி நெறி