இன்புற வாழ – கவிதை

பாலும் தேனும் கலந்திட
நதியும் கடலும் கலந்திட
அவனும் அவளும் கலந்திட
பூமியும் வானமும் கலந்திட

மலரும் வண்டும் கலந்திட
இரவும் பகலும் கலந்திட
மண்ணும் மரமும் கலந்திட
பாசமும் நேசமும் கலந்திட

நினைவும் கனவும் கலந்திட
அன்பும் அறனும் கலந்திட
வேற்றுமை ஒற்றுமை கலந்திட
எல்லாம் இனிதே கலந்திட
இன்புற வாழ்ந்திடலாமே….

ஆ.வேலுசாமி
சங்கரன்கோவில்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.