இமயமலை அதிசயம்

அமாவாசை, மாதப் பிறப்பு, ஏகாதசி, சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் ஆகிய புண்ணிய காலங்களில் கங்கையிலும், இமயமலை நதியிலும் பக்தியுடன் ஸ்நானம் செய்வது, அளவற்ற புண்ணிய பலனைத் தருவதுடன் பாவங்களையும் உடனுக்குடன் போக்கும்.

இதே போன்று இமயமலை உட்பகுதியில் உள்ள உஷ்ணநீர் குண்டங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மகா புண்ணிய நதிகளின் அவதார ஸ்தலமாகிய கங்கோத்ரி, யமுனோத்ரி, மானாஸர் (ஸ்ரீ வியாஸர் குகை அருகில்) மற்றும் நதிகள் சங்கமமாகும் பிரயாகைகள் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வதாலும், மிகக் கடுமையான தவத்தினால்கூட பெறமுடியாத புண்ணிய பலனைப் பெறலாம்.