உதிரத்தின் உயிர்ப்பூ!

துளிர் கால்கள் கொண்டு
தளிர் நடைபோடும்
பேதையவள்…

அவள் கொலுசொலி
கேட்டால் காற்று
புல்லாங்குழல் இசைக்கும்!

அவள் வளையோசை
கேட்டால் பூக்கள்
புன்னகை பூக்கும்!

சிறு பட்டாடை உடுத்தி
அவள் நடந்து வந்தால்
மனம் பட்டாம்பூச்சியென
படபடத்து பறக்கும்!

வானம் அவளுக்குக்
குடை பிடிக்கும்!
பூமி அவளுக்கு
மடி கொடுக்கும்!

அஞ்சுகம் அவளின்
கொஞ்சுமொழி கேட்டு
மனம் துஞ்ச மறுக்கும்!

கள்ளிப்பாலுக்குத்
தப்பி வந்த
அந்த கன்னிமகள்
என் கண்ணான
கண்ணல்லவா!
என் கண்ணின் மணியல்லவா!
என் உதிரத்தின் உயிர்ப்பூ
அல்லவா!
என் உயிரின் உதிரமல்லவா!

ரோகிணி கனகராஜ்

ரோகிணி கனகராஜ் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.